பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!
மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.
பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!
தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.
காஸாவின் கண்ணீர்…!
என்ன நடக்கிறது இங்கே என் அம்மா எங்கே? சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை எனச் சொல்லி அனுப்பிய இறைவனே நீ எங்கே? என்ன ஆனது என் தொட்டில்? எங்கே என் அம்மா உறங்கிய கட்டில்? எங்கள் கூட்டைக் கலைத்த குரங்கு எது? ஏன் இப்படி உடைத்து எறிந்தது? தென்றல் தாலாட்டும் என் உறக்கத்தை ஏன் இடி இப்படிக் கலைத்தது? இது இரவா? பகலா? எனைச் சுற்றி நிற்கும் இவர்கள் தேவதைகளா? இல்லை சைத்தான்களா? ஓராண்டு முடிவதற்குள் எத்தனை முறை […]
இது கவிதையால் சாத்தியமாயிற்று!
வெறுப்பிலிருந்து அன்புக்கும், வன்முறையிலிருந்து கருணைக்கும் நகர ஒரே வழி கவிதைதான். கவிதை, இன்னும் நம்மை அழகாகத் தொடர்புகொள்ள வைக்கும்.
உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 ****** “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்” கலித்தொகை 149 : 6 – 7 கலித்தொகை – நெய்தற் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை – மருதம் கி.மு. காலத்துப் பாடல் ஒற்கம் என்றால் வறுமை. தான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு […]
பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!
மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.