நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!
‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.
சுந்தர ராமசாமி: நவீனத்துவக் கனவின் வடிவம்!
சுந்தர ராமசாமி 1977-78 வாக்கில் எழுதத் தொடங்கியிருந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல், பாலுவின் உலகம் என்ற நாவலிலிருந்து கிளைத்துத் தனிப்படைப்பாக உருவானது. பாலுவின் உலகம் நாவல் பற்றி ஒருமுறை, “இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நாவலின் முதல் பகுதி பாலுவின் வாழ்வனுபவங்களின் பதிவாகவும், இரண்டாம் பகுதி அந்த அனுபவங்களின் பரிசீலனைகளாக டயரி வடிவிலும் அமையும்” என்றார். பின்னர், ஜே.ஜே. எழுதத் தொடங்கியபோது, “பாலுவின் உலகம் எழுதிக்கொண்டிருந்தபோது சம்பத் என்ற பாத்திரம் உள்ளே வந்தது. தொடர்ந்து சம்பத்தின் நண்பனாக […]
சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!
அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய ‘சூரியகாந்தி’ எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப் பார்த்தார். இது ஜெயலலிதா நடித்த 100-வது படம். படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது பெரியாருடன் முக்தா சீனிவாசன், ஜெயலலிதா, முத்துராமன் மற்றும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம். – நன்றி: முகநூல் பதிவு
எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடிவந்து விடும்!
1954-ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது, அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். 1957-ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில் அறிமுகமானார். அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்து பார்த்தவன். அதற்குப் பிறகு 12-வது முடித்து ஓவியக்கல்லூரி முடித்து சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார். “இந்தப் […]
பகட்டை விரும்பாத ஆளுமைகள்!
அருமை நிழல்: தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு சுகமான அனுபவம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் உணவருந்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம். நன்றி: முகநூல் பதிவு #மக்கள்திலகம் #எம்.ஜி.ஆர் #பிவிநரசிம்மராவ் #என்டிராமராவ் #mgr #makkalthilagam #pvnarasimmarav #ntramarav
மக்கள் மொழியை இயல்பாகப் பேசும் ழாக் ப்ரெவர்!
நூல் அறிமுகம்: மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான். பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பேசுகிறார்; அவர்கள் மொழியின் கற்பனை வளம், அதில் மறைந்திருக்கும் மேதாவிலாசம், சிக்கல்கள் இவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார். பாமர மனிதனுக்கென்று ஒரு தொன்ம உலகம் (mythology) இருக்கிறது; அவனுடைய அன்றாட வாழ்க்கைக்குள் இருந்துகொண்டுதான் […]