இலக்கியம்

சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!

அருமை நிழல்: சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு. மிகப்பெரிய நடிகராக வளர முக்கியக் காரணம், அவரின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தான். சிறு வயது முதல் சிம்புவிற்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது டி.ராஜேந்தர் தான். டி.ராஜேந்தர் தயாரித்த தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி மற்றும் […]

கொல்கத்தாவில் விருது: எஸ்.ரா தமிழில் ஏற்புரை!

பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக கொல்கத்தா சென்றுவந்த அனுபவத்தைத் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தப் பதிவிலிருந்து… “பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கப்பட்டிருந்த ‘மீரா இன்’ போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. […]

வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!

வலம்புரிஜான். ‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர். தொலைக்காட்சியில் இயற்கை உணர்வைப் போதித்தவர். பழகியவர்களிடம் உண்மையான இயல்போடு இருந்தவர். எல்லாவற்றுடன் ‘தாய்’ வார இதழை முன்னிலைப்படுத்திய ஆசிரியர். பல பத்திரிகையாளர்களை அரவணைத்து வளர்த்தவர். அவரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம். பத்திரிகையாளரும், கவிஞரும், தற்போது கவனிக்கத்தக்க ஆய்வாளராகவும், பேச்சாளராகவும் பன்முகம் கொண்ட கடற்கரயின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் […]

கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!

இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா. ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச் சொன்னாராம். “ஓ மை லேடி! இது என்ன கண்கள்? உங்கள் கண்கள் மூலம் என் புகைக்குழாயை ஒருமுறை நான் பற்ற வைத்துக் கொள்ளலாமா?” பிற்காலத்தில் கோமகள் ஜார்ஜியானா இந்த வர்ணனையைச் சொல்லிச் சொல்லி வியந்தாராம். “கவிஞர்னு சொல்லிக்கிட்டு இதுவரை எத்தனையோ பேர் என்னோட கண்ணழகைப் […]

அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!

ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?

நூல் அறிமுகம்: கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ****** நூல்:  பூவுலகின் கடைசிக்காலம்! ஆசிரியர்: கிருஷ்ணா டாவின்சி புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: ரூ. 100/-