மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!
கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர். அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர். அவரால் விளைந்த பணிகளின் பயன்கள் இம்மண்ணில் உரம் பெற்ற ஒவ்வொரு தருணத்திலும், அந்த உழைப்புக்கான அங்கீகாரம் அவரைத் தேடிச் சென்றடைந்துள்ளது. இப்போது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அவரைத் திமுக அறிவித்திருப்பதும், அந்த வகையில் சேர்கிறது. பெரும்பாலும் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு என்பதால், மாநிலங்களவையில் […]
நகைக்கடன் வழங்கும் முறை எளிமையாக்கப்படுமா?
அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கியின் புதிய விதி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களாட்சியின் உச்சத்தை இன்னும் எட்டவில்லை!
இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் நம் அரசியல் கருத்துக்களை வைக்கவும் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளவும் வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக அரசியலுக்கு அடிப்படையான கொள்கை விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுத்தி விவாதித்து மானுடத்தின் மதிப்பு மிக்க வாழ்க்கை விழுமியங்களை இழந்து வாழ்கின்றோம் என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட […]
இந்தியாவின் போக்கையே திசை மாற்றிய தலைவர்!
எந்தவொரு தலைவரையும் எதற்காக நாம் நினைவு கூர்கிறோம்? ஒருவரை நினைவு கூர்வது என்பது அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளுக்காகத் தான். அவை நமக்கு வழிகாட்டிடும் என்ற அடிப்படையில்தான் என்று உணர்ந்து நாம் தலைவர்களை நினைவு கூறுகின்றோம். அந்த வகையில் பார்த்தால் ராஜீவ்காந்தி இந்திய நாட்டுக்கு ஒரு முறைதான் பிரதமராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த ஆளுகைச் செயல்பாடுகள் என்பது இன்றைய 21-ம் நூற்றாண்டின் […]
கொரோனாப் பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை!!
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே […]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி பேச்சு நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை குறித்தும் […]