அருமை நிழல் :
1990-ல் காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ராஜீவ் கடும் உழைப்பை மேற்கொண்டார்.
‘பாரத யாத்ரா’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்தப் பிரச்சாரத்தில் மக்களோடு நெருங்கி ரயிலில் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்தார்.
அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பீகாரில் அப்படி அவர் பயணப்பட்டபோது எடுத்த புகைப்படம்.