நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்? உண்மையான காரணம் இதுதான்.
“நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தொடங்குகிறார்கள், ஆனால், சிலர் மட்டும் பெரிய வெற்றி அடைகிறார்கள்! ஏன்?”
இந்த பத்து காரணங்களைப் புரிந்துகொண்டால், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.
கனவுகளில் தைரியம்.
வெற்றி பெற்றவர்கள் சிறிய கனவுகளை இல்லை, பெரிய கனவுகளை நினைக்கிறார்கள்.
“நான் சாதிக்க முடியாது” என்று நினைப்பதை விட, “என்னால் முடியும்” என்று நினைக்கிறார்கள்.
“நீங்கள் கனவு காணும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை உயரும்!”
செயல்முறை திட்டம்
வெற்றி பெற்றவர்கள் வெறும் கனவுகளோடு நிற்கமாட்டார்கள்.
அவர்கள் திட்டமிட்டு செயல்படுவார்கள்.
அன்றாட இலக்குகளை நிர்ணயித்து அதன்படி செயல்படுவார்கள்.
“திட்டமில்லாமல் முன்னேற முடியாது, வெற்றிக்கு ஒரு திட்டம் தேவை!”
கடினஉழைப்பு
வெற்றி பெற்றவர்கள் நேரத்தை வீணாக்குவதில்லை.
அவர்கள் முடிவு செய்யப்பட்ட வேலைகளை செய்து முடித்த பிறகு மட்டும் ஓய்வெடுப்பார்கள்.
சிறிய ஒளி கூட இருளை விரட்டும் – சிறிய முயற்சிகளும் பெரிய வெற்றிகளை தரும்.
“உழைத்த பிறகு மட்டுமே வாழ்க்கை நம்மை உயர்த்தும்!”
பயமின்மை
வெற்றி பெற்றவர்கள் தோல்வியை ஒரு படியாகப் பார்க்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் முயற்சி செய்வார்கள், தோல்வியை ஒரு பாடமாகப் பார்ப்பார்கள்.
தோல்வி வந்தாலே வெற்றி நெருங்கி வந்துவிட்டது என்று நம்புவார்கள்.
“தோல்வி என்பது கடைசி அத்தியாயம் அல்ல, வெற்றிக்கு வழிகாட்டும் பாதை!” என்று நம்புபவர்கள்.
விமர்சனங்களே விதைகள்
வெற்றி பெற்றவர்கள் எந்த விமர்சனத்தையும் வளர்ச்சிக்கான சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள்.
“நான் சரியாக இருக்கிறேனா?” என்று அவர்களே கேள்வி எழுப்புவார்கள்.
விமர்சனங்களை ஏற்று, தங்களை மேலும் மேம்படுத்துவார்கள்.
“விமர்சனங்களை பயமாக பார்க்க வேண்டாம், அது உங்கள் வளர்ச்சிக்கான விதைகள்!”
புதிய விஷயங்கள்
உலகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது – வெற்றி பெற்றவர்களும் வளர வேண்டும்.
புத்தகங்கள், பயிற்சிகள், ஆன்லைன் கற்றல் – எதுவாக இருந்தாலும், கற்றுக்கொள்வதை தொடருவார்கள்.
“கற்றல் நிறைவடையும் நாள் வளர்ச்சி முடிவடையும் நாள்.”
நல்ல நண்பர்கள்
உங்களை ஊக்குவிக்காத மக்களை விட்டுவிடுங்கள்.
வெற்றி பெற்றவர்கள் தங்களை ஊக்குவிக்கும் மக்களை சுற்றி வைத்திருக்கிறார்கள்.
சுற்றியுள்ள நண்பர்களின் மனநிலையே வெற்றியின் முதல் அடித்தளம்.
“நீங்கள் உங்களின் ஐந்து நெருக்கமான நண்பர்களைப் போலவே ஆகிவிடுவீர்கள்.”
விடாமுயற்சி
எதிர்ப்புகள் வந்தால், அவர்கள் நிற்க மாட்டார்கள்!
நிறைய பிரச்சினைகள் வந்தாலும், விடாமல் தொடர்ந்து போராடுவார்கள்!
“இது கடினம்” என்று சொல்லாமல், “இதற்கான வழி என்ன?” என்று கேள்வி கேட்பார்கள்.
“வெற்றியாளர்கள் வழிகளை தேடுவார்கள், தோல்வியாளர்கள் காரணங்களை தேடுவார்கள்.”
பணம் குறிக்கோள் அல்ல.
வெற்றி பெற்றவர்கள் நல்லது செய்ய விரும்புகிறார்கள்!
அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
பணத்திற்கும் மேலாக, உலகத்தை மாற்றும் கனவுகளை அடைவார்கள்.
“வாழ்க்கையில் வெற்றி என்பது பணத்தை சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதில் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்.”
பொறுமை தெளிவான மனநிலை.
வெற்றியாளர்கள் எதையும் பொறுமையாக அணுகுவார்கள்.
அவர்கள் விரைவில் கைவிட மாட்டார்கள்.
நன்றாக யோசித்து, தெளிவாக முடிவெடுப்பார்கள்.
“வெற்றி பொறுமையை நேசிக்கும்.”
வெற்றியின் ரகசியம் உங்கள் கையில்.
நீங்கள் முன்னேற விரும்புகிறீர்களா?
தோல்வியால் பயப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?
வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைய நினைக்கிறீர்களா?
இன்று முதல் செயல் ஆரம்பியுங்கள். ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றம் கண்டால், நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெறலாம்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியைவிட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும், இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றிப் படியில் காலடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்!
நன்றி: மு.சின்னச்சாமி