மரபணு மாற்று நெல் வகைகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?

கடந்த மாதத்தில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் இரண்டு புதிய மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகளை ஆறிமுகப்படுத்தினார்.

அதில் ஒன்றின் பெயர் Kamala மற்றொன்று Pusa Rice DST1 ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், கூடுதல் உற்பத்தியை கொடுக்கும், உப்பு நீரிலும் நல்ல உற்பத்தியை கொடுக்கும், இது நோய்களைத் தாங்கி வளரும் மற்றும் பருவநிலை மாற்றத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் இது தாங்கி வளரும் என்கின்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் மோடி பேசியவற்றை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. “இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் திரும்ப வேண்டும். இயற்கை வேளாண்மை தான் சிறந்தது.

தற்சார்பு வேளாண்மை வேண்டும். மரபு ரகங்கள், பாரம்பரிய விதைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். சிறுதானியங்களை நாம் கொண்டாட வேண்டும். மரபு ரகங்களில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. 

பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரக்கூடிய தன்மை மற்றும் குணம் அதற்கு உள்ளது, அனைத்து சத்துக்களும் அதில் உள்ளது.” என்கிறார்.

சிறுதானியங்களில் அபரிமிதமான சத்துக்கள் உள்ளது என்று கூறி அதற்காக பல்வேறு திட்டங்களை ஒதுக்கி, பல்வேறு மானியங்களையும் மக்களுக்கு கொடுத்தனர்.

பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல்கள் வந்தாலும் அவைகளை சமாளித்து தன்னுடைய உருவத்தை மாற்றி தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் தன்மை மரபு நாட்டுரக விதைகளுக்கு உண்டு என்று அரசும் கூறுகின்றது. விஞ்ஞானிகளும் அதை தான் கூறுகின்றனர்.

இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் விதைகளே பேராயுதம் என்று கூறுகிறார். அந்த விதைகள் நம்மிடம் இருந்தால் மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம். அதுவே நிறுவனத்திடம் இருந்தால் அதுவே நம்மை அழிக்கும் ஆயுதம் ஆகும் என்று தொடர்ச்சியாக கூறினார்.

நாம் முதன் முதலில் மரபணு மாற்றப்பட்ட ஒரு விதையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், இந்திய சுற்றுச்சூழல் சட்டம் 1986 ன் கீழ் 1989இல் ஒரு விதிகளை வகுத்தது மத்திய அரசு.

அந்த விதிகளுக்கு உட்பட்டு, உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, ஏற்றுமதி செய்ய, இறக்குமதி செய்ய, பயிரிடுவதற்கு என அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும். GEAC (genetically engineer appraisal committee) என்று ஒரு கமிட்டி உள்ளது, அதனிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை ஆராய்ச்சி செய்வதற்கென்று லேப் இல்லை என்று தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த ஒரு கருத்துமே தெரிவிக்கவில்லை.

நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்ட கருத்தும் கூட. இவ்வாறு விதைகளுக்கு உட்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட BT Brinjal மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாட்டு கத்தரிக்காய் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறி நம்மைப் போன்ற இயற்கை ஆர்வளர்கள் கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன கூறுகிறார்கள் என்றால்,

ஒருவர் தேவை என்கிறார் மற்றொருவர் இது தேவையில்லை உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது என்று இரு வேறு மாறுபட்ட கருத்துக்களை கூறியதால், தலைமை நீதிபதி அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்று கொண்டு வந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால்தான் மரபணு திருத்தப்பட்ட (Jean heritage) என்று கொண்டு வந்தார்கள்.

அதற்காக தான் இந்த வேலையை அவர்கள் செய்தார்களே ஒழிய, மற்றபடி இதுவும் மரபணு மாற்றப்பட்டவை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ அதையேதான் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. அதை தான் தரவுகளும் சொல்கின்றனர்.

*ஒரு காணொளியில் இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார் அவர்கள் கூறுகிறார்.

Genetic Roulette என்ற புத்தகத்தில் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் அறிமுகப்படுத்தும் போது நடைபெற்ற சோதனையில் அதை முதலில் எலிகளுக்கு கொடுத்தபோது, எலிகளின் விதைப்பை சுருங்கிப் போய்விட்டது, அடுத்ததாக கோழிகளுக்கு கொடுக்கிறார்கள், கோழிகள் மூன்று மாதத்தில் இறந்துவிட்டன.

அதை தொடர்ந்து மாடுகளுக்கு கொடுக்கிறார்கள், மாடுகளும் இறந்துவிட்டன. இவையெல்லாம் எங்கெங்கு ஆய்வுகள் நடந்தன, எந்தெந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டன என்று ஆதாரத்துடன் அந்த புத்தகத்தில் உள்ளது.

நமக்கு எதற்கு மரபணு மாற்றப்பட்ட ரகம்? இவை யாரிடம் இருந்தது என்றால்,

Bt cotton அவர்களுடைய ஒட்டுமொத்த சந்தை marksans pharma என்ற கம்பெனியிடம் உள்ளது. வேறு யாரிடமும் இந்த BT cotton விதையே கிடையாது.

BT என்றால் Bacillus thuringiensis பாக்டீரியா அந்த பாக்டீரியாவை எடுத்து என்ன செய்வார்கள் என்றால், விதைகளின் மரபணுவில் சென்று எந்த மரபணு நோய்கள் தாக்குவதற்கு காரணம், எந்த மரபனு பூச்சிகள் தாக்குவதற்கு காரணமோ அந்த மரபணுவை எடுத்து bacillus thuringiens என்ற பாக்டீரியாவை அதில் வைக்கின்றனர்.

இந்த பாக்டீரியா என்பது ஒரு விஷம். இந்த BT விதைகளை பயிர் செய்யும்போதும் இந்த பூச்சிகள் வந்து அதை தாக்கும் போதும், பூச்சிகள் இலைகளை, காய்களை, பூக்களை உண்ணும் பொழுது, chemical content அந்தப் பூச்சிகளின் உள்சென்று பூச்சிகள் இறந்து விடுகின்றன.

ஒரு சாதாரண புழு பூச்சியே இறந்து விடுகிறது என்றால், அதை உண்ணக்கூடிய கால்நடைகளின் நிலைமை, அவைகளை உண்ணக்கூடிய மனிதர்களின் நிலைமை என்ன? இவர்களுக்கெல்லாம் இதுவரை இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்படுவதில்லை.

அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரேசில் இது போன்ற சில நாடுகள்தான் இந்த BT ரகத்தை அனுமதித்திருக்கிறார்கள். பல நாடுகள் BTயை தடை செய்து வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த BT ரகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் முதன் முதலில் பருத்தி தான் 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பருத்தி அதிகமாக விளைவது ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகள் ஆகும்.

அந்தப் பகுதியில் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் BT ரக விதைகளை வாங்கி பயிரிட்டதால் நோய் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகி பருத்தி வராமல், கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்தியாவிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பகுதி மித்ரபா. அதற்கு காரணமும் இந்த BT காட்டன் தான். அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மேலும் உணவுப் பொருட்களை கொண்டு திணிக்கிறார்கள்.

அதுவும் அரசாங்கமே திணிக்கின்றது என்பதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இவ்வளவு வேலைகளையும் மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்டவை செய்வதற்கு காரணம் என்னவென்றால் இந்தியாவின் விதை சந்தையின் மதிப்பு இன்றைய நிலைமையில் 7.8 அமெரிக்க பில்லியன் டாலர்.

ஒரு பெல்லியன் டாலர் என்பது நம் ஊர் மதிப்பில் 8,300 கோடி. 2024 ஆம் ஆண்டு விதை வணிகத்தின் சந்தை மதிப்பு என்னவென்றால் குறைந்தபட்சம் 64,740 கோடிக்கு இந்தியாவில் விதை வியாபாரம் நடந்திருக்கிறது.

இதே 2033 எவ்வளவு நடக்கும் என்று கணித்திருக்கிறார்கள் என்று பார்த்தால், கிட்டத்தட்ட 1.50 லட்சம்கோடி ரூபாய்க்கு விதை வணிகம் 2034 இல் நடக்கும் என்று கூறி ஒரு வணிக கருத்தியல் ஆய்வு இருக்கிறது.

மொத்தமாக பத்து கம்பெனிகள் மட்டுமே இந்த வகை விதைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய வியாபாரம், பெரிய லாபம். இந்த லாபம் எல்லாம் இருக்க வேண்டும் என்றால், நமது மரபு ரகத்தை ஒழிக்க வேண்டும்.

அவ்வாறு ஒழிக்க வேண்டும் என்றால் இவர்களிடம் மட்டுமே உற்பத்தி செய்து, இவர்களிடம் மட்டுமே காப்புரிமை இருக்கின்ற, இவர்களிடம் மட்டுமே பேட்டன் இருக்கின்ற இந்த விதைகளைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினால் தான், இந்த சந்தை அவர்களிடம் இருக்கும். இந்த விதைகளை மீண்டும் விதைத்தால் முளைக்காது, அப்படியே போட்டால் மகசூல் கொடுக்காது.

அவர்களிடமிருந்து வாங்கி விதைத்தால் மட்டுமே மகசூல் இருக்கும். ஏனென்றால், அவர்கள் தான் மரபணுவை திருத்திகொடுக்கிறார்கள், மாற்றிக்கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன்.

அவர் தன்னுடைய இறுதி காலத்தில் பசுமைப் புரட்சி என்பது தவறானதாகிவிட்டது, ஒட்டு மொத்த இந்திய விவசாய நிலங்களையும் மலடாக்கிவிட்டது.

விவசாய நிலங்கள் மலடானதால் தரம் இல்லாத உணவு பொருட்களை சாப்பிட்டு மக்கள் நோயாளியாகி விட்டார்கள். எனவே பசுமை புரட்சி தவறு என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே நாம் இயற்கை வேளாண்மைக்கு திரும்ப வேண்டும். மரபுரக விதைகளை பயிரிட வேண்டும். அவைகள் தான் இந்த மண்ணுக்கும் மக்களுக்குமானவை, இனி அரசு இதைத்தான் முன்னெடுக்க வேண்டும் என கூறி, அவரே அறிவித்துவிட்டு சென்றார்.

பசுமைப் புரட்சியின் தந்தைஎம்.எஸ்.சுவாமிநாதன் என்று நாமெல்லாம் போற்றப்படும் அவரே இவ்வாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால், அவர் வழிவந்த விஞ்ஞானிகள் அனைவரும் இதை விடுவதே இல்லை. ஏனென்றால், அவர்கள் யாருக்காக பணியாற்றுகிறார் என்றால், உலக அளவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தான் பணியாற்றுகிறார்கள்.

விதைகள், உரங்கள், மருந்துகள் முழுவதும் அவர்களிடம்.ஆனால் அதனைப் பெறுவது விவசாயிகள், கடனாளியாவது விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டு இருப்பதும் விவசாயிகள் இதற்கான திட்டம்தான் மரபணு மாற்றப்பட்டவை.

சமீபத்தில் மத்திய அரசினுடைய உணவு ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சாவூரில் உள்ளது. இதுவரை மக்காச்சோளத்தில் மரபணு மாற்றப்படுவதற்கு மத்திய அரசு அனுமதியே கொடுக்கவில்லை.

ஆனால், இவர்கள் எடுத்து சில வகைகளை sample செய்கிறார்கள். பாப்கார்ன், ஸ்வீட் கார்ன் இவைகளை எடுத்து ஆய்வு செய்கிறார்கள்.

அவர்கள் ஆய்வு செய்ததில் 15 சதவீதம் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் அதில் உள்ளது. ஆனால், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்திற்கு தடை இருக்கிறது, அனுமதியும் கொடுக்கவில்லை.

அவ்வாறு அனுமதியே கொடுக்கப்படாத மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் இந்தியாவிற்குள் எப்படி வந்தது? என்று பார்த்தால் ஹரியானா, குஜராத்தில் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் நடைமுறையில் இருக்கிறது.

இவைகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்காதபோது எப்படி மரபணு மாற்றப்பட்ட உணவு பொருள் சந்தைக்கு வந்தது? இவையெல்லாம் இந்தியாவில் விவாதிக்கப்படாதவை.

வீரிய ரகம், ஒட்டு ரகம் என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு, அதிக மகசூல் கொடுக்கும், இவை இந்த நோயைத் தாங்கும், பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை ஏதேனும் ஒரு பயிருக்கு மருந்து அடித்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் குறைந்திருக்கிறதா? ஒரு காலத்தில் ஒரு வகை மருந்து அடித்து, இப்போது மூன்று வகை மருந்துகளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை பூச்சிகளை கொள்ளும் என்று அவர்கள் கொடுத்த மருந்து ஏதேனும் வேலை செய்து இருக்கிறதா? இதனால், பூச்சிகளை தான் நாம் அழித்திருக்கிறோமா?

பூச்சிகளை ஒழிக்கவே முடியாது. பூச்சிகளை விரட்டத்தான் முடியும், அதுவும் இயற்கை முறையில்தான் செய்ய முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை..

பூச்சிகள் தங்களை சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கிறது.

இதற்கு முன்பு கொசு மருந்து அடித்தோம். கொசுக்கள், கொசு மருந்தைத் தாங்கி வளரக்கூடிய தன்மையைப் பெற்றுவிட்டது.

அதேபோல் இன்று பூச்சிகளும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தாங்கி வளரக்கூடிய அளவிற்கு தன்னை தகவமைத்துக் கொண்டது.

அப்படி தகவமைத்துக் கொண்டதனால் தான் பூச்சிகளை ஒழிக்க முடியவில்லை. பூச்சிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

பழைய மற்றும் புதிய வகை பூச்சிகளும் உருவாகி உருவாகி ஏகப்பட்ட விவசாயிகளுக்கு சோதனைகளை கொடுக்கிறது இதுவும் இன்று மிகப்பெரிய உண்மையாக உள்ளது.

ஆனால் பூச்சிகளை கொள்வதற்கும் பூச்சிக்கொல்லி வகைகளை கட்டுப்படுத்துவதற்கு தான் மரபு ரக விதைகளை அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர்.

பூச்சிக்கொல்லிகளை போட்டால் ஒரு வருடம் அல்லது ஆறு மாதம் மட்டும்தான், அதன் பிறகு பூச்சிகள் தன்னை தகவமைத்துக்கொண்டு பயிர்களை தாக்குகிறது என்றபோது எப்படி இது எதார்த்தத்தில் நமக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் அரிசி உற்பத்தி பெருமளவில் இருக்கிறது, தற்சார்பாக இருக்கிறது, அதிகமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்.

அதிகமாக உற்பத்தி செய்கிற அரசாங்கம் அதை எடுத்து எத்தனால் தயாரிப்பதற்காக கொடுக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த நெல் ரகம் என்ன செய்யப் போகிறது என்பதை, துளிகூட சிந்தனை இல்லாமல் அரசு அறிவித்து இருக்கிறது.

இவை அரசாங்கத்திடம் தானே உள்ளது, அரசாங்கம் தானே கொடுக்கப் போகிறது இவை எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போகப்போகிறது என நினைக்கலாம்.

இதனை உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த வேலையை செய்வது யார்? அரசுத்துறை செய்கிறதா? இல்லை அனைத்தும் தனியார் நிறுவனங்கள் தான் செய்கின்றன.

எனவே, அது தனியார் நிறுவனங்களுக்கு தான் பாதை வகுக்கும்‌. விவசாயிகள் அதிக செலவு செய்து விதைகளை வாங்கக்கூடிய வேலையை அது உருவாக்கி இருக்கிறது.

இன்று விதையே விவசாயிகளிடம் இல்லை. அது பெரும் நிறுவனங்களிடம் சென்று பிறகு மீண்டும் விதைகளை விவசாயிகளுக்கு கொடுப்பதற்கான திட்டங்களை வகுக்காமல் மீண்டும் நிறுவனங்களை நோக்கி இந்த அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது. அதுதான் எதார்த்தமான சூழலாக இருக்கிறது.

எனவே இந்த திருத்தப்பட்ட மாற்றப்பட்ட மரபணு விதைகள் நிறுவனங்களுக்கானவை விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.

இதனால் உற்பத்தி கூடும், நோய்களைத் தாங்கி வளரும், பருவநிலை மாற்றத்தை சந்திக்கும் என்பதெல்லாம் பொய் என்பது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதை நாமெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

நமக்கு தேவை மரபு ரகங்கள், தற்சார்பு வேளாண்மை, பாரம்பரிய ரகங்களை வளர்த்தெடுத்து அவைகளை எல்லாம் நாம் இன்னும் சிறப்பாக கையாண்டு, மிகச் சிறப்பாக அவைகளை பயிரிட்டு மக்களுக்கு கொடுக்கும்போது அது சரியாக இருக்கும்.

இன்னொரு ஆராய்ச்சி முடிவு மத்திய அரசு வெளியிட்டது என்னவென்றால், இன்று இருக்கக்கூடிய விதைகளில் 63 சதவீத விதைகள் ரசாயனங்களாக மாறிவிட்டது என்கின்றனர்.

63% ரசாயனமாக மாறியதற்கு காரணம் என்னவென்றால், இதே விஞ்ஞானிகள் தான் ரசாயன உரங்களுக்கு காரணம்..! இந்த உரத்தை போடு, இந்த பூச்சி கொல்லி மருந்துகளைப் போடு என்று சொல்லிச் சொல்லி அவைகளைப் போட்டு நிலங்கள் அனைத்தும் நஞ்சாகி விட்டன.

உற்பத்தி திறனை இழந்துவிட்டன. கார்பன் சத்து 0.5% ஆவது குறைந்தபட்சம் இருக்க வேண்டும் . சராசரியாக இன்று இந்தியா உற்பத்தியில் 0.3% குறைந்துவிட்டது.

நிலமே விளையும் தன்மையிலிருந்து மாறி இரசாயனமயமாகிவிட்டது. ரசாயனமயமான எந்த நிலத்திலாவது எந்த விததையை பயிரிட்டாலும் அது உற்பத்தியை கொடுக்குமா? நிலத்தினுடைய தன்மையை மீட்பதற்கு ஏற்கனவே அது ரசாயன உறத்தாலும் ,பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் தான் நிலத்தின் தன்மையை இழந்திருக்கிறோம்.

இதனை அரசாங்கத்தின் ஆய்வுகளும் தெரிவிக்கிறது.

நிலத்தின் தன்மையை மீட்டெடுப்பதற்கு தகுந்த மாதிரியான ரகங்களை மரபு ரகங்களை, பாரம்பரிய ரகங்களை அறிமுகப்படுத்தாமல் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்காமல், மக்களுக்கு வழங்காமல் இவர்கள் மரபணு மாற்றப்பட்ட திருத்தப்பட்ட ரகங்களை கொடுக்கிறார்கள் என்றால் அது எந்த விதத்தில் சரியானதாகும்.

ஆகவே மரபணு மாற்றப்பட்ட திருத்தப்பட்ட ரகங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தவறான செயல், இது வன்மையாக கண்டிக்கதக்கது.

என் இதுபற்றி விரிவாக பேசும் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவருமான வழக்கறிஞர் திரு ஈசன் முருகசாமி பிரகடனப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் பேசும்போது உடனடியாக அதை திரும்ப பெற வேண்டும். இந்திய அரசு முழுக்க முழுக்க ஒரு நிலைப்பாடு எடுக்கனும். மரபணு மாற்றப்பட்ட ரகங்களை திருத்தப்பட்ட ரகங்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும் என்கிறார்.

அதுதான் இந்திய விவசாயிகளை ஒரு மறுமலர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது. இதற்காக நாமும் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.

– M.S. செல்வராஜ்

Comments (0)
Add Comment