31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 3-வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

ஏற்கனவே 30 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ள இவர் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

55 வயதாகும் காமெடி வீட்டா 8,894 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை திங்கள் கிழமை இரவு 11.15 மணிக்கு ஏறி சாதனை படைத்துள்ளார்.

முதன் முதலாக 1994 ஆம் ஆண்டு தான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறத் தொடங்கினார் காமிரீட்டா.

சில ஆண்டுகளில் வருடத்திற்கு இருமுறையும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய அனுபவம் உண்டு.

கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டும் இரு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவரது சகப் போட்டியாளராக நேபாள நாட்டைச் சேர்ந்த பாசங் தவா 29 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கெண்டன் கூல் 19 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேபாள நாடு சுற்றுலா துறையின் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கி சிகரம் ஏறுவோரை ஊக்குவித்து வருவது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.

Comments (0)
Add Comment