சென்னைக்கு அருகில் உலகத் தரத்தில் புதிய நகரம்!

பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  சட்டப்பேரவையில் இன்று (14.03.2025) தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ:

▪ இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்

▪ மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ. 13,807 கோடி ஒதுக்கீடு – இதுவரை பலன் பெறாதவருக்கும் கிடைக்க நடவடிக்கை

▪ ரூ. 100 கோடியில் சென்னையில் அறிவியல் மையம்

▪ 2000 சுயசார்பு தொழிலாளர்களுக்கு E-bike வாங்க ரூ. 20,000 மானியம்

▪ காஞ்சிபுரம் அரசு அண்ணா மருத்துவமனை ரூ. 120 கோடியில் தரம் உயர்த்தப்படும்

▪ மதுரை கடலூரில் 250 கோடியில் காலணி தொழில் பூங்கா 20,000 பேருக்கு வேலை

▪ ஓசூரில் ரூ. 400 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்

▪ காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெரும் பள்ளிக்கும் விரிவாக்கம் – 3.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் – ரூ. 600 கோடி ஒதுக்கீடு.

▪திருச்சியில் 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழில் பூங்கா 5000 பேருக்கு வேலைவாய்ப்பு

▪ சென்னை பெருநகர் பகுதிகளில் ரூ. 88 கோடியில் மழை நீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள்

▪ திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, நெல்லை நதிக்கரை மேம்பாட்டிற்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு

▪புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ. 6,668 கோடியில் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதனால் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என கணிப்பு.

▪ 10,000 மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்படும். ரூ. 37,000 கோடி வழங்க இலக்கு.

▪ வேளச்சேரியில் ரூ. 310 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்.

▪ சென்னை, கோவை, மதுரையில் ரூ. 275 கோடியில் மாணவியர் விடுதிகள். இதன்மூலம் 1000 மாணவிகள் பயன்பெறுவர்.

▪ நாட்டில் சிறந்த பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகத்தை உருவாக்க நடவடிக்கை

▪ 45 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும். இதன் காரணமாக ஐ. நா அங்கீகரித்த 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.

▪ கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ. 2200 கோடி – 6100 கி. மீ சாலைகள் அமைக்கப்படும்

▪ பள்ளிப் பாடத்தில் செஸ் விளையாட்டு சேர்க்கப்படும்.

▪ விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ. 10 கோடி ஒதுக்கப்படும்

▪ அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம்.

▪ இருமொழி கொள்கையில் மாற்றமில்லை. ஒன்றிய அரசு கொடுக்காத கல்வி நிதிக்கு பதிலாக தமிழ்நாடே ரூ. 2000 கோடி ஒதுக்கும்.

▪ கோவளத்தில் 14 tmc கொள்ளவு கொண்ட புதிய நீர்த் தேக்கம் ரூ. 350 கோடியில் அமைக்கப்படும். 3010 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

▪செமி கண்டக்டர் இயந்தரத் தொழிற்பூங்கா கோவையில் (சூலூர், பல்லடம் பகுதிகளில்) 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.

▪புதிய புனல் மின் நிலையங்கள் ரூ. 11721 கோடியில் வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளில் அமைக்கப்படும்

▪ சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் நடவடிக்கை

▪ ரூ. 70 கோடியில் 700 gas பேருந்துகள் இயக்கத் திட்டம்

▪ 1125 மின் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. சென்னையில் 950, கோவையில் 75, மதுரையில் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன்.

▪ 19000 கைவினையர்களுக்கு மானியமாக ரூ. 74 கோடி.

10 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2.5 லட்சம் கோடி கடன் உதவி

▪ உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்.

▪ சமூக நல்லிணக்க ஊராட்சிகள் விருது – 10 ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை

▪புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்

▪ ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி!

▪ பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!

▪ பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000

▪ சென்னை கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம்

▪ சென்னை சீராக்கக் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 2423 கோடி

▪ 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறு சீரமைப்பு ரூ. 675 கோடி ஒதுக்கீடு

▪ மகளிர் விடியல் பயணம் ரூ. 3,600 கோடி ஒதுக்கீடு

▪ சென்னைக்கு அருகில் உலகத் தரத்தில் புதிய நகரம்

▪ 10 இடங்களில் 77 கோடி செலவில் தோழி விடுதிகள்

▪ கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ 2000 கோடி

▪ அன்பு சோலை முதியோர் பராமரிப்பு மையம் 10 இடங்களில் அமைக்கப்படும்

▪ அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ. 50 கோடியில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.

▪ கலைஞர் கனவு இல்லம் – ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3500 கோடி

▪ மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஊர்க்காவல் பாதையில் சேர்க்கும் திட்டம்

▪ வியன் திறன் மிகு மையங்கள் அமைக்க 50 கோடி (VR)

▪ 4000 மெகாவாட் திறன் கொண்ட மின் கலன் சேமிப்பு அமைப்புகள்

▪ கடல் சார் வள அறக்கட்டளைக்காக ரூ. 50 கோடி

▪ வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம்

▪ரூ.40 கோடி செலவில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபு சார் காட்சி அரங்கம்

▪ தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

▪ பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை ரூ.10 கோடி ஒதுக்கீடு!

▪ ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்!

▪ நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைப்பு 5,256 குடியிருப்புகள் ரூ.1,051 கோடி

▪ திருவான்மியூர் – உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம். ரூ.2,100 கோடி

▪ ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு

▪ ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடி

▪ இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 2 லட்சம் இழப்பீடு

▪ மீன் பிடி தடை கால ஊக்கத்தொகை ரூ 8000 ஆக உயர்வு

▪ இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை

▪ நான்காண்டுகளில் 78882 பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

▪ ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடி

▪மேற்கு புறவழிச்சாலை- கோயம்புத்தூர் 12.5 கி.மீ நீளம் ரூ.348 கோடி திருநெல்வேலி 12.4 கி.மீ நீளம் ரூ.225 கோடி ஒதுக்கப்படும்

▪மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்த ஆய்வு. (local train ) சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் , சென்னை – காஞ்சிபுரம்-வேலூர், கோவை-திருப்பூர் – ஈரோடு- சேலம் .

▪ நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் ரூ.75 கோடி

▪ முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 3000 புதிய வீடுகள்

▪ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் 10 லட்சம்

▪ உதகையில் 70 கோடியில் புதிய பூங்கா.

Comments (0)
Add Comment