மன உளைச்சலை சமாளிப்பது எப்படி?

நூல் அறிமுகம்:

இன்றைய குழப்பமான சூழ்நிலையில், மக்கள் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டுத் தவிப்பதைப் பரவலாகக் காண முடிகிறது. மன உளைச்சலுக்கு ஒருவன் ஏன் ஆளாகிறான்? அதனைச் சமாளிப்பது எப்படி? என்பதைக் கூறும் ஒரு தனித்துவமான நூல் இது.

மனதைக் கட்டியாள்வதற்கு யோகியர்கள் கூறியதையும், நவீன மனோதத்துவ ஆய்வாளர்களின் கருத்துகளையும் தெளிவாகப் புரியவைக்கிறது.

மனச் சிதறல்கள் மனத்தின் ஆற்றல்களை நசித்துவிடுகிறது. எனவே, மனப்பயிற்சியின் மூலமாகவும், முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலமாகவும், மனப்பிரச்சினைகளில் இருந்து வெளிவரலாம்.

மன உளைச்சலுக்கான முழுமையான தீர்வைத் தரும் ஓர் அரிய புத்தகத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.

*****

நூல்: மன அமைதிக்கு வழி
ஆசிரியர்: சுவாமி கோகுலானந்தர்
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 252

#மன_அமைதிக்கு_வழி_நூல் #Mana_Amaidikku_Vazhi_book #Kindle_Edition
#சுவாமி_கோகுலானந்தர் #gokulandhar

Comments (0)
Add Comment