பூரண மதுவிலக்கு சாத்தியமா?

எஸ்.எஸ். வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் குடிப்​பழக்கம் இன்று பரவலாகி​விட்டது. தமிழகத்தில் 28.5 சதவீதம் ஆண்கள் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்​ளனர். இவ்விஷ​யத்தில் அகில இந்திய அளவில் தமிழகத்துக்கு 19-வது இடம். முதலிடம் சத்தீஸ்கர்.

இந்தியாவில் 7-ல் ஒருவர் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். பதின் பருவத்​தினரிடமும் மதுப்​பழக்கம் பரவலாகி​விட்டது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தி​யாகும்.

மதுவிலக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டிய காலத்தின் கட்டா​யத்தில் நாம் இருக்கிறோம்.

சமுதாய, பொருளாதார, தனிமனித ஆரோக்​கியம் ஆகியவற்றைப் பாதிக்கும் மிகப்​பெரிய பிரச்சினையாக மது அருந்தும் பழக்கம் இருக்​கிறது. இதைத் தடுக்க மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அரசின் கடமை:

மதுவிலக்கை அமல்படுத்​தினால் கள்ளச்​சா​ராயம் பெருகி​விடும் என்று கூறுவதை ஏற்றுக்​கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்​றனர். காரணம், கள்ளச்​சா​ராயம் விற்கப்​பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

மதுவிலக்கு அமல்படுத்​தப்​பட்​டால், இப்போது மது குடிப்​பவர்களில் 10 சதவீதம் பேர் வேண்டு​மானால் சாராயம் அருந்​தலாம். ஆனால், மது குடிப்போரின் எண்ணிக்கை இதனால் கணிசமாகக் குறைந்​து​விடும் என்பதை மறுப்​ப​தற்கில்லை.

இதன்மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும்போது அதை வாங்கி அருந்​துவது எப்படித் தவறாகும் என்பது மது குடிப்​போரின் வாதமாக உள்ளது.

எனவே, அரசு மது விற்பனையைக் கைவிடும் நிலையில், மது குடிப்​போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் ஐயம் இல்லை.

மதுவிலக்கு அமலானாலும் சிலர் குடிப்​பதைத் தடுக்க முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தி​யமில்லை என்று சிலர் கூறுகின்​றனர். ஆனாலும், அதனை முயன்று பார்க்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.

இன்னொரு புறம், மதுவிலக்கு அமலானால் அண்டை மாநிலங்​களில் சர்வ சாதாரணமாக மதுபானங்கள் கிடைப்​பதைக் காரணமாக்கி அங்கு சென்று மது அருந்​துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கிவந்து விற்பதோ மிக எளிதாகி​விடும்.

விலை குறைவு என்ற ஒரே காரணத்துக்​காகப் புதுவையில் இருந்து ஏராளமான மதுபானங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்​படுத்த முடிய​வில்லை.

அப்படி​யிருக்க முழுமையாக மதுவிலக்கு அமலானால், வெளியில் இருந்து மதுவைக் கொண்டு​வரு​வதை​யும், அங்கு சென்று குடிப்​ப​தையும் தடுக்க முடியாது என்று ஒருசாரார் கருதுகிறார்கள்.

குடிக்​கின்ற ஒவ்வொரு​வரும் மனம் மாறினால்தான் குடிப்​பழக்​கத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.

மிகப்​பெரிய மக்கள் எழுச்சி வந்தால்​தான், அரசும் சேர்ந்து மதுக்​கடைகளை மூடுவதற்கு வாய்ப்பு உருவாகும்.

சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்​தா​லும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்​படுத்து​கிறபோது மிகப்​பெரிய மாற்றத்​துக்கான ஒரு புதிய பாதை ஒன்று நிச்சயம் உருவாகும்!

நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

Comments (0)
Add Comment