இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது?

ரசனைக்குரிய வரிகள்:

வாழ்க்கை
நம்ப முடியாத
அளவுக்கு
சலிப்பூட்டுகிறது;

சொல்ல முடியாத
படிக்கு சாரமற்றிருக்கிறது;

விழுங்கிவிட முடியாத
அளவுக்கு கசப்படிக்கிறது;

துப்பிவிட முடியாத படிக்கு
சிக்கிக் கொள்கிறது;

கனவுகாண முடியாத
அளவுக்கு
வறண்டு போயிருக்கிறது;

கற்பனை
செய்ய முடியாதபடிக்கு
எரிச்சல் படுத்துகிறது;

தீர்த்து வைக்க
முடியாத அளவுக்கு
பிரச்சனை
கொண்டிருக்கிறது;

அணைக்கவே
முடியாதபடிக்கு
கனன்று
பற்றி எறிந்து
கொண்டிருக்கிறது;

காற்று போல நீர்போல
இல்லாத
இந்த மிருகத்தை
என்னதான் செய்வது.?

– கவிஞர் விக்ரமாதித்யன்

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment