பலாத்கார முயற்சி: சிறுமியைக் காப்பாற்றிய குரங்குகள்!

செய்தி:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 வயதான ஒரு சிறுமியை அங்குள்ள இளைஞர் ஒருவர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த குரங்குகள் ஒன்று சேர்ந்து அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் மீது பாய்ந்து கடித்து விரட்டி இருக்கின்றன.

கோவிந்த் கமெண்ட்:

பேசாமல் காவல்துறையில் ஏற்கனவே மோப்பம் பிடிப்பதற்கென்று தனியாக நாய் படை இருப்பது மாதிரியே குரங்கு படையும் உருவாக்கி விடலாம் போலிருக்கிறதே!

டார்வின் தியரியை எப்படியெல்லாம் நடைமுறை அனுபவத்தில் பார்க்க நேரிடுகிறது!

Comments (0)
Add Comment