பிறருக்கு உதவும்போது நம் வாழ்வும் மேம்படும்!

படித்ததில் ரசித்தது:

உங்களுக்கு ரோஜாப் பூக்கள் கொண்டு வந்து தரும் கைகளிலும் அந்த ரோஜாப் பூவின் மணம் சற்றே ஒட்டிக் கொள்ளும் என்றொரு சீனப் பழமொழி உண்டு.

அதாவது மற்றவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு நாம் உழைத்தால் நம்முடைய சொந்த வாழ்க்கையும் அப்படியே உயர்வடையும்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் நற்காரியங்கள் செய்யும்பொழுது உங்களுடைய வாழ்க்கையும் மேம்பட்டு சிறப்படையும்.

ஒவ்வொரு நாளிலும் நல்ல விடயங்கள் நமக்கு நடைபெற வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய வேண்டும்.

Comments (0)
Add Comment