போராடும் மருத்துவர்களை கசாப்புக் கடைக்காரர்கள் என்பதா?

செய்தி:   

மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பிறகு, மாநிலம் முழுக்க மருத்துவர்கள் போராடிய நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான மைத்ரா, “போராடும் மருத்துவர்கள் கசாப்புக் கடைக்காரர்“ என்று சொல்லி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது பாஜக.

கோவிந்த் கேள்வி:  

ஏற்கனவே தன்னுடைய சக மருத்துவர் மிகக் கொடுமையாக உயிரிழந்த நிலையில் மருத்துவர்கள் போராடிக்கிட்டு இருக்காங்க…

இந்த நிலையில் எரிகிற தீயில எண்ணெய ஊத்துற மாதிரி கசாப்புக் கடைக்காரர் என்கிற உதாரணம் எல்லாம் மேற்குவங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏவுக்கு தேவையா? போராடுபவர்களின் இயல்பைக் கூட மக்கள் பிரதிநிதியால் சரிவர புரிந்து கொள்ள முடியாதா?

Comments (0)
Add Comment