இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!

நூல் அறிமுகம்: இயற்கை மருத்துவ வழிகாட்டி!
இயற்கை ஒரு மாபெரும் ஆற்றல். இது பஞ்சபூதங்களால் ஆனது. இதை நாம் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய இன்றைய வாழ்க்கை இயற்கை வாழ்வினின்றும் விலகிச் சென்றுள்ளது. ஆகவேதான் இயற்கை வாழ்வு பற்றியும், இயற்கை சிகிச்சை முறை பற்றியும் நாம் அறிந்து புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது. வாழ்க்கையின் இரகசியத்தையும், அமைப்பையும் நன்கு அறிந்து புரிந்தவர்கள் நோய்வாய்படுவதில்லை.
ஒவ்வொரு நோய்க்கும் நம்முடைய செயல்களே காரணமாயிருக்கின்றன. நோயை நிவர்த்தி செய்வது நோயாளியின் கையில் தான் இருக்கிறது. நோய் நீங்க வேண்டுமானால் அதற்குரிய மூலகாரணங்கள் அகற்றப்பட வேண்டும்.

நடைமுறையில் உள்ள பல்வேறு நோய்கள் பற்றி சொல்லியும் அவற்றிற்கு இயற்கை முறையில் சிகிச்சை செய்யும் முறைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஆர்வமுள்ள அன்பர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

*****

நூல்: இயற்கை மருத்துவ வழிகாட்டி!
ஆசிரியர்:வீ.சேரந்தையா
கிண்டில் பதிப்பகம்.

Comments (0)
Add Comment