விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது!

புரட்சியாளர் அம்பேத்கர்

படித்ததில் ரசித்தது:

பெரியோர்களே, நாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுவதன் அவசியம் குறித்து தேவைக்குமேல் மிகுதியாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் உள்ளது.

கல்வி பெறுதல் கட்டாயமான தேவை. எழுதப் படிக்கப் பேசத் தெரிந்து கொள்ளல் மட்டும் போதாது. நம்மில் பலர் கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.

– அண்ணல் அம்பேத்கர் நூலிலிருந்து…

Comments (0)
Add Comment