மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்விக் கடன் வழங்குக!

- விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த காங்கிரசைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விஜய் வசந்த் அளித்துள்ள கோரிக்கை மனுவில், “ஜி.எஸ்.டி வரி, வங்கிக் கடன்கள் மற்றும் விலைவாசி உயர்வினால் தவிக்கும் மக்களின் நலன் கருதி சில கோரிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்க முன்வர வேண்டும்.

அது போன்று கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி சேவை மீதான ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதன் மூலம் அது மாணவர்களின் கல்வி செலவு குறைய ஏதுவாக இருக்கும்.

இதேபோல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மீதான வரியைக் குறைப்பது, அவர்களுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இதேபோல் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியைக் குறைத்து விலைவாசியை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர அரசு ஆவன செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment