நடிப்பைவிட ஓவியம் முக்கியம்!

ஓவியர் ஷ்யாம்

அந்த 20 வயதை மறக்கவே முடியாது. திடீரென கிளறிக் கொண்டிருக்கும்போது பழைய ஆல்பத்தில் ஒரு போட்டோ சிக்கியது.

முதல்முதலாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஒரு பேட்டிக்காக நண்பர் ராஜசேகர் எடுத்த புகைப்படம் இது. அந்த சமயத்தில் ஓவியம் வரைவதைவிட சினிமா வாய்ப்புகள் எனக்கு அதிகம் வந்தது.

ஓவியம் வரைவதே சுகம் என ஒரே முடிவில் இருந்தேன். அதன்பின் நண்பர்களின் அன்பு அழைப்பால் சில படங்களில் நடித்தேன்.

இதுவரை ஒருவரிடமும் சினிமாவில் நடித்ததற்காக பணம் வாங்கியதே கிடையாது. அவர்களே கேட்பார்கள். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று.

நான் சொல்லும் ஒரே பதில், “நான் முதலில் நல்லா நடிக்கிறேனா என்று பாருங்கள்”.

ஓவியங்களை நான் காகிதங்களில் நடிக்க வைக்கிறேன். நடிப்பைவிட ஓவியம் வரைவது சுகமாகத்தான் இருக்கிறது.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment