சென்னையில் ரூ.70 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!

செய்தி:

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், ஒரு பேருந்தின் மூலம் கொண்டு செல்லப்பட இருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கோவிந்த் கேள்வி:

முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மர்மமாக கடத்தப்பட்டபோது பிடிபட்டது. அது தொடர்பான விசாரணையும் பல கட்டங்களில் நடந்தது. தற்போது அதை ஹவாலா பணம் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இப்போது 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் பிடித்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்.

முன்பு ரயில் மூலம் பணம் கடத்தப்பட்டது. இப்போது பேருந்தின் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட இருந்த நிலையில் பிடிபட்டிருக்கிறது.

பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் போக்குவரத்துத் தடங்களிலேயே இந்த விதமான கடத்தலும், நவீனமயமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது போலிருக்கிறதே?

Comments (0)
Add Comment