மதுரையில் பறிக்கப்பட்ட இன்னொரு உயிர்!

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை-16) காலை இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று வழிமறித்து அவரிடம் தகராறு செய்து, சரமாரியாக வெட்டியுள்ளது.

அங்கிருந்து தம்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குடும்ப பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments (0)
Add Comment