தாய்ப் பாலில் ஒருதுளி…!

இலக்கியச் சந்திப்பு:

உலகத் தமிழ் பீட விருது பெற வட அமெரிக்கத் தமிழ் சங்கம் செல்லும் அண்ணன் அறிவுமதி அவர்களை தன் அலுவலகத்திற்கு வந்து செல்லுமாறு நண்பர் இயக்குனர் லிங்குசாமி அன்புடன் அழைத்தார்.

வந்திருந்து சிறிது நேரம் இயக்குனரோடும் என்னோடும் அலுவலகத்தில் உள்ள பிற தம்பிகளோடும் உரையாடித் தான் புதிதாக எழுதியுள்ள ‘தாய்ப்பால்’ என்ற தமிழ்ப் பாலை எங்களுக்குப் பரிசளித்தார்.

தாய்ப்பாலில் ஒருதுளி:

“ஆதித் தமிழை
மறுக்காதே
நீ
ஆணி வேரை
அறுக்காதே.”

தாய்மொழி, தாய்மண் என்று வேர் பிடித்து அதன் தொடர்ச்சியாய் இயற்கை, சூழலியல் என முளைவிட்டு உலகப் பொதுநலம் என்று மலர்ந்து தொட்ட இடமெல்லாம் உலகலாவிய உயிர்களுக்கான பேரன்பின் பசும்பாலாய் ஊறுகிறது ‘தாய்ப்பால்’.

இது சங்கத் தமிழின் சாரம்
நம் தங்கத் தமிழுக்கு ஆரம்.

***
புகைப்படம்: இயக்குனர் என். லிங்குசாமி

நன்றி: பிருந்தா சாரதி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment