ஆர்.எஸ்.பாரதியின் தொடர் சர்ச்சைப் பேச்சுக்கு நெருக்கடி!

செய்தி: தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி வருவதால் அவர் மீது வழக்குப் போட இருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

கமெண்ட்: மோசமான முறையில் ஆர்.எஸ்.பாரதி பேசுவது தொடர்கதைதான். இதற்கு முன்பும் ஊடகங்களுக்கு தொடர்ந்துத் தீணி போடும் வகையில், ஹெச்.ராஜாவுக்கு போட்டியாக பல சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ். பாரதி.

அப்படி கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் முடிச்சுப் போட்டு பேசும் பேச்சுக்கு எதிராகத்தான் வழக்கு தொடுக்க இருக்கிறார் அண்ணாமலை.

அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில், “நாய் கூட இப்போது பி.ஏ. படிக்கிறது” என்று அவர் வழக்கம்போல அள்ளிவீசி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

மனுஷர் நீட் தேர்வை எதிர்க்கலாம்; அதற்காக பி.ஏ. படித்தவர்களை அல்லது தற்போது படிப்பவர்களை இந்த அளவிற்கு கேவலப்படுத்த வேண்டுமா?

ஏற்கனவே பலரைத் தொடர்ந்து நாய்கள் கடித்து வரும் நிலையில், இப்படி ஒரு நாய்க்கடிப் பேச்சைப் பேசியிருக்கிறாரா அமைப்புச் செயலாளர்!

annamalaineetrs bharathiஅண்ணாமலைஆர்.எஸ்.பாரதிநீட்ஹெச்.ராஜா
Comments (0)
Add Comment