சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமா இந்தியா?

சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமாக இந்தியா உள்ளதென உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிட்சா, கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்பது, உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?

மற்ற நோய்களைப் போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது.

வேறு ஏதோ பிரச்சனைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது.

சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். இதைவிட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்?

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் ‘ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும்.

பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது. கண்ணில் விழித்திரை பாதிக்கிறது.

இதய ரத்தக் குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது.

உணவுக் கட்டுப்பாடு?

மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல.

தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து அதற்கு ஏற்ப உணவு பழக்கத்தை கையாண்டால் பூரண ஆயுளுடன் இருக்கலாம்.

சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதில் ஆவாரம்பூவும் நிலவேம்புக் கஷாயமும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. இந்தக் கஷாயத்தை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1.ஆவாரம்பூ
2.நிலவேம்பு

செய்முறை:

ஆவாரம்பூ மற்றும் நிலவேம்பு ஆகிய இரண்டையும் 500 கிராம் அளவு எடுத்து வெயிலில் உலர்தி காய வைத்துக் கொள்ளவும்.

பிறகு மிக்ஸியில் போட்டு பொடியாக்கி சேமிக்கவும். பொடி நைஸாக இருக்க வேண்டும். கொரகொரப்பாக இருந்தால் அதை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிளாஸ் அளவுள்ள நீரில் 1 ஸ்பூன் அளவு ஆவாரம்பூ – நிலவேம்புப் பொடியைச் சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

Comments (0)
Add Comment