மானுடத்தின் வழிகாட்டியாய் விளங்கும் நூல்!

நூல் அறிமுகம்:

இந்தியாவின் இணையில்லா முன்னாள் குடியரசுத் தலைவர் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் வித்தகர். பாரதரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் சிந்தனைகளை ‘Inspiring Thoughts’ என்ற ஆங்கில நூலினை தமிழ் உலகம் பயனுறும் பொருட்டு ‘எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்’ என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலில் கூறப்பட்டுள்ள அவருடைய கருத்துகள் நம்மை திரும்ப திரும்ப சிந்திக்கத் தூண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரின் பங்கையும் திரையிட்டு காட்டும். நமது வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

குழந்தைகள், இளைஞர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண குடிமகன், தாய், தந்தையர், ஆசிரியர் என அனைவரின் கடமைகளை வெளிச்சமிட்டு காட்டும் சுடர் விளக்கு. அனைவரும் படித்து பயன்பட வேண்டிய மானுடத்தின் வழிகாட்டி.

*****

நூல்: எழுச்சியூட்டும் எண்ணங்கள்
ஆசிரியர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள்: 124
விலை: 100/-

#எழுச்சியூட்டும்_எண்ணங்கள்_நூல் #Ezhuchi_Oottum_Ennangal_book_review #Inspiring_Thoughts_book #ஏ_பி_ஜே_அப்துல்_கலாம் #apj #apj_abdul_kalam

Ezhuchi Oottum Ennangal book reviewInspiring Thoughts book
Comments (0)
Add Comment