எல்லாப் பக்கங்களிலும் பாதை உண்டு!

வாசிப்பின் ருசி:

ஒரு பாறையில்
ஒரு கூழாங்கல்லில்
ஒரு மணல் பரலில்
நுழைய விரும்பினேன்;
கதவைத்திறக்கச் சொல்லிக்
கெஞ்சினேன்;
“எல்லா பக்கங்களிலும் நாங்கள்
திறந்தே இருக்கிறோம்”
மூன்றுமே சொல்லின;
எல்லாப் பக்கமும்
திறந்த வீட்டுக்குள்
நுழையத் தெரியாத திகைப்பில்
வெளியே நிற்கிறேன்
இத்தனை காலமும்!

– கல்யாண்ஜி

#கல்யாண்ஜி #kalyanji_kavithaigal #கல்யாண்ஜி_கவிதைகள்

kalyanji kavithaigalகல்யாண்ஜி
Comments (0)
Add Comment