அடுத்தடுத்து தூண்டிலில் சிக்கும் அரசியல்வாதிகள்!

பொதுவாகத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரு கட்சியில் உள்ள தலைவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது அடிக்கடி இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.

தற்போதும் அதே யுக்தி கையாளப்பட்டு, அரசியல் ரீதியான தூண்டிலில் சிலர் விடுபடுவது அதிகரித்து இருக்கிறது.

அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உட்பட சில பேர் பாஜகவில் ஐக்கியமானார்கள்.

அதைத் தொடர்ந்து அடுத்து தமிழகத்திற்கு வர இருக்கிற பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இணைய வாய்ப்பிருக்கின்றது என்கிற தகவல் தொலைக்காட்சி விவாதம் வரைக்கும் பேசப்பட்டது.

இப்படி பேசப்பட்டுவந்த நிலையில் இன்றைக்கு டெல்லியில் பாஜகவில் இணைந்திருக்கிறார் விளவங்கோடுத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான விஜய தரணி.

இப்படி அடுத்தடுத்து எத்தனை பேர் தேர்தலுக்கு முன்பு இதே விதமாக தூண்டிலில் மாட்டப் போகிறார்கள்?

Comments (0)
Add Comment