விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி!

கேலோ இந்தியா என்பது இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தேசிய வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் தனிமனித வளர்ச்சிக்கான கருவியாக விளையாட்டை மையப்படுத்துவது இதன் நோக்கமாகமாகும். 

கேலோ இந்தியா மூலம் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

2020-ம் கொரோனா தொற்று காரணமாக  போட்டிகள் நடத்தப்படாத நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் ஹரியானா மாநிலத்திலும், 2022-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 26 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்களை பெற, சுமார் 6,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

2023-ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-01-24 வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை கடந்த 19-ம் நாள் மாலை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்பட்ட கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இந்த கேலோ இந்தியா போட்டிகள், 2024 ஜனவரி 19-ம் தேதி தொடங்கி, 31 ஜனவரி நிறைவு பெற்றது.

நடந்த போட்டிகளில் 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்தது.

38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்தது.

கடந்த ஆண்டு 8-ம் இடத்தை பெற்ற நிலையில், இந்தாண்டு 2-ம் இடத்திற்கு தமிழ்நாடு அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலம், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

முன்னதாக 2022-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி பெருமை சேர்த்துக் கொண்ட தமிழ்நாடு, இந்த ஆண்டு கேலோ இந்தியா போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்தி இன்னும் புகழை சேர்த்துள்ளது.

இன்னும் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றுவதே நமது இலக்கு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

Comments (0)
Add Comment