விடைபெற்றார் வெள்ளந்தி மனிதர்!

தேமுதிக தலைவர் புரட்சி கலைஞர் திரு விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தினார்.

சூதும், துரோகமும், பொறாமையும் நிறைந்த உலகில் வெள்ளந்தியாக தன் மனதில் பட்டதை அப்படியே பேசிய மனிதர்!

கால் வைக்கின்ற இடத்தில் எல்லாம் கண்ணி வெடி வைக்கின்ற திரை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்து, தனக்கென ஒரு பாணியில் தமிழ் கிராமங்களில் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் கேப்டன்.

பேராபத்து நிறைந்த அரசியல் சடுகுடு களத்தில் பல காலம் கபடி ஆடினார் மூச்சை பிடித்தபடி, தன் இணை, துணை திருமதி பிரேமலதாவுடன்.

ஏழை, எளிய மக்களுக்காக அள்ளி அள்ளிக் கொடுத்த சிவந்த மனம் படைத்த இந்த கருப்பு மனிதன்.

கோடம்பாக்கம் எனும் கோட்டையில் அனைத்து திரை உலக வயிறுகளுக்கும் பிரியாணி பந்தி சமமாக போட்ட அன்னமிட்ட “கை” இந்த வெள்ளை முழுக்”கை”.

கடந்த பல ஆண்டுகள் உயிரிருந்தும் உயிரற்று வாழ்ந்த இந்த உயர்ந்த மனிதனின் உயிர் பிரிந்து விட்டது.

நமது மதுரையின் மகன் மறைந்து விட்டார்.

இவர் வாழ்க்கை நமக்கு சொல்லாமல் சொல்லும் செய்தி இளமையில் வாழும் போது இருந்த கெட்ட பழக்க வழக்கங்கள் பிற்காலத்தில் “நின்று கொல்லும் என்பதே”.

இவர் கொண்டாட வேண்டிய மனிதர் மட்டுமல்ல, வணங்கத் தக்க ஒரு நல்ல மனிதர்!

– நன்றி: ம.மதன முனியப்பன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment