சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!

பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம்.

அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தை, மிக எளியமுறையில் நடைமுறைப்படுத்தினார் அறிஞர் அண்ணா.

சமூக மாற்றத்திற்கு வித்திட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் அமல்படுத்திய நாள் இன்று என்பதை சமூக அக்கறையுடன் நினைவில் கொள்வோம்.

Comments (0)
Add Comment