நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி!

1973 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். நேற்று முன் தினம் அவருக்கு வயது 50.

கல்லூரி காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதன் பின்னர், அவரது வாழ்க்கையில் வசந்தம் வீசியது. வசதிகள் பெருகின.

1994 ஆம் ஆண்டு வெளியான ‘இருவர்’ படத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தார் மணிரத்னம். படம் ஓடவில்லை. அதே ஆண்டு ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘Aur Pyaar Ho Gaya’ இந்திப் படமும் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை.

1997 ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ படம், ஐஸ்வர்யா ராயை, நடிகையாக அங்கீகரித்தது. ஆராதித்தது. தமிழில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், இந்தியிலும் பெரிய ஸ்டார்.

ஹீரோக்களைக் காட்டிலும், கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுப்பார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் விதி விலக்கு. ஒரு படத்துக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு 6 கோடி ரூபாய் கேட்கிறார்.

இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு 775 கோடி ரூபாய்.

தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டும் 112 கோடி ரூபாய்.

இந்தியாவில் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் ஐஸ்வர்யா ராய்க்கு சொத்துக்கள் உள்ளன.

வாங்கும் சம்பளத்தை ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்துள்ளார்.

2007ஆம் ஆண்டு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

மணி ரத்னம், கமல் இணையும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் என கோடம்பாக்கம் ஏரியாவில் ஒரு தகவல் ஓடுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment