பிரதியெடுக்க முடியாத கலைஞன் சிவாஜி!

“என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!” என அய்யா வ.உ.சிதம்பரனாரின் மகன் சொன்னார்.

இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம்.

பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட எகிப்திய பூமிக்கு அதிபராக விளங்கிய நாசர் தியாகராயநகர் அன்னை இல்லத்தின் அன்பு பிடியில் கட்டுண்டு விருந்துண்டு மகிழ்ந்து, எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத பெருமையை நடிகர் திலகத்திற்கு கொடுத்துச் சென்றார்.

ஆசிய ஆப்பிரிக்கப்பட விழாவில் உலகப் புகழ்வாய்ந்த கெய்ரோ விருதை
உலக நடிகர்களின் நடிப்புகளை எல்லாம் புறம் தள்ளி ஆறடிக்கும் குறைவான சிவாஜிகணேசன் பெற்று வந்தார்.

சிவாஜி நடித்ததை படமாக்கும்போது என் கண்களில் வழியும் கண்ணீர் கேமராவின் லென்ஸ்களில் படிந்து என்னால் படமாக்க முடியவில்லை என்று உணர்ச்சி பொங்க கூறினாரே ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ்.

இந்திய நடிகன் எவருக்குமே செய்யாத பெருமையாக சிவாஜியின் வருகைக்காக அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் வரவேற்பு தீர்மானம் போட்டு சிவாஜிக்கு சிறப்பு செய்தது சிங்கப்பூர் அரசாங்கம்.

சிவாஜி போல என்னால் நடிக்க முடியாது என்று உலக நடிகன் மார்லன் பிராண்டோ கூறினார்.

“என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!” என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன் என அவரது ரசிகன் ஒருவர் சொன்னார்.

சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் “பத்மநாபா! போய் விட்டாயா?” என ஒரு முதியவர் உருகி சத்தமிட்டாரே? அதை விடவா பெரிய விருது?

சிவாஜி மேடையில் வீற்றிருந்த போது ஓடி வந்து ஒரு பெண்மணி கையை கிழித்து தன் ரத்தத்தை அவரது நெற்றியில் திலகம் இட்டார் ஒரு பெண்மணி.

என்னுடைய படத்தை ஏன் போஸ்டரில் அடித்துள்ளனர் என்று சிவாஜியின் திருநாவுக்கரசர் உருவத்தை பார்த்து காஞ்சிப் பெரியவர் சொன்னார்.

அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் திலகத்தை வரவேற்க விமான நிலையத்திலிருந்து அன்னை இல்லம் வரை பல கிலோமீட்டர் தூரம் வரை இருபுறமும் மக்கள் கூட்டம் திரண்டு நடிகர் திலகத்துக்கு மரியாதை செய்தது.

தங்கள் படத்திற்கு விருதுகளைப் பெற்ற இயக்குனர்கள், எங்களின் கலை வாழ்க்கை சிவாஜி போட்ட பிச்சை என்று கூறினர்.

மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் சிவாஜியின் மிருதங்க வாசிப்பு நடிப்பை பார்த்த அந்தப் படத்திற்கு மிருதங்கம் வாசித்த நிஜக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் சொன்ன வார்த்தை, “சிவாஜி வாசித்ததே அசல்” என்றார்.

சிவாஜியின் நடையை பார்க்க அவரை காக்க வைத்து பின் சிவாஜி நடந்து வருவதை பார்த்து ரசித்து, உங்கள் நடையழகை பார்க்கவே நான் உங்களை நடந்து வரச் சொன்னேன் என்று விளக்கம் சொன்னார் புட்டபர்த்தி சாய்பாபா.

எந்த தயாரிப்பாளர் சிவாஜியை வேண்டாம் என்று சொன்னாரோ, அதே தயாரிப்பாளர் பிற்காலத்தில் நான் உலகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன் சிவாஜியை போல் ஒரு நடிகனை கண்டதில்லை என்று சொன்னார்.

எப்போது சிவாஜியின் நடிப்பை பார்த்து ரசிக்க ஆரம்பித்தேனோ, அப்போது இருந்து இன்று வரை அவருடைய நடிப்பைத் தவிர வேறு எந்த நடிப்பையும் ரசிப்பதில்லை என்று தன்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை இன்று வரை உருக உருக வைத்திருக்கிறார் நடிகர் திலகம்.

  • நன்றி : முகநூல் பதிவு
Comments (0)
Add Comment