இன்றைய சேமிப்பு, அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

இன்று உலக சிக்கன நாள் கடைபிடிப்பதையொட்டி, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன் வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாராதச் செலவினங்களைச் சமாளிக்க இயலும்.

சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும்.

சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.

எனவே, உலக சிக்கன நாள் கொண்டாடப்படும் வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அதன்மூலம் வாழ்வில் வளம் சோ்க்க வேண்டும்.

அது நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் துணைபுரிந்திடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment