போர்க்களத்தில் தமிழ்த் தொலைக்காட்சி செய்தியாளர்கள்!

இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கிடையில் இருவாரங்களாகப் போர்ச்சூழல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தந்தி தொலைக்காட்சியின் இணைச் செய்தி ஆசிரியரான ஹரிஹரனும், புதிய தலைமுறையின் செய்தி ஆசிரியர் குழு சார்பாக கார்த்திகேயனும் இஸ்ரேல் – பாலஸ்தீனப்பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.

பல்வேறு உலக நாடுகளில் இருந்து செய்தியாளர்கள் அங்கு திரண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து இதுவரை இரண்டு பேர் நேரடியாகப் போர்க்களத்திலிருந்து செய்திகளை நேரடியாக வழங்கிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க நல்ல அம்சம்.

அதே சமயம் இஸ்ரேல் போரில் ஏற்னவே ஒரு செய்தியாளருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்கள் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்கள் களச் செய்திகளை வழங்கட்டும்.

Comments (0)
Add Comment