இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று தலைமையுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், திமுக உருவாகக் காரணமே சமூகநீதிதான் என்றும் தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன என்றும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது என்றும் கூறினார்.

சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் – சமூகநீதிக்கான தடைகளும் விழத்தான் செய்கிறது எனக் கூறிய முதலமைச்சர், இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது என்றும் சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Comments (0)
Add Comment