இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மறைவு!

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

ஆரம்ப காலங்களில் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பிறகு இயக்குநர் வசந்திடம் சில படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் நடித்துள்ளதால் அதற்கான டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஏற்பட்ட ‘ஹார்ட் அட்டாக்’ கினால் இந்த மரணம் நேர்ந்திருக்கிறது.

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment