மணக்கோலத்தில் மெல்லிசை மன்னர்!

திரையுலகில் முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும் அதன் ராக லட்சணங்கள் மாறாமலும், திரையிசையை மெல்லிசையாக்கி தந்த மேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 700 படங்களுக்கும் மேல் இசை அமைத்திருக்கின்றார் மெல்லிசை மன்னர்.

விஸ்வநாதன் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்.

மெல்லிசை மன்னர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. உடன் இருப்பவர்கள் டி.எம்.எஸ்., ஜிக்கி, கே.ராணி.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment