ஆதித்யா எல்1 விண்கலம் சீராக இயங்கிறது!

இஸ்ரோ தகவல்

சூரியனைக் கண்காணிக்கவும் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் தொடர்ந்து 4 மாதங்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட்டை மையமாக கொண்டு ஒளிவட்ட பாதைக்கு சென்றடைய உள்ளது.

இந்நிலையில் தற்போது புவி வட்டபாதையில் சுற்றி வரும் ஆதித்யா விண்கலம் முதல் சுற்றை முடித்து முதல் கட்ட உயரம் அதிகரிக்கும் பணி நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆதித்யா விண்கலம் நன்றாக இயங்கி வருகிறது. நேற்று காலை, முதல் கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் நடந்தது. அடுத்தக்கட்ட உயரம் அதிகரிக்கும் பணி நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும்” எனப் பதிவிட்டுள்ளது.

Comments (0)
Add Comment