ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை!

சட்ட ஆணையம் கருத்து

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து ஆராயவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. சட்டம் மற்றும் பணியாளர் துறை சார்ந்த நிலைக்குழு, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிக்கையை கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கியது.

அந்த அறிக்கையில், தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த ஆலோசனைகளை சேர்த்திருந்தது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களைத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

மேலும், கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் வாங்குவதற்கு சுமார் ரூ. 9 ஆயிரத்து 300 கோடி தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது.

Comments (0)
Add Comment