நடிகர் முத்துக் காளையைப் பாராட்டிய கவுண்டமணி!

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த ‘என் உயிர் நீதானே’, சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘அழகான நாட்கள்’ படத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து, சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் அரசியல்வாதியான கவுண்டமணிக்கு உதவியாளராக நடிக்கிறார் முத்துக்காளை.

படப்பிடிப்பில், முத்துக்காளையை தன்னருகே அழைத்து, அனைவரிடமும் என் உயிர் நீதானே படத்தின் காமெடி டைலாக்கை பேசி, பதில் டையலாக்கை அவரை பேசச் சொல்லி ரசித்து சிரித்திருக்கிறார் கவுண்டமணி.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய நடிகர் முத்துக்காளை, கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.

நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த என் உயிர் நீதானே படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தன.

தற்போது லக்கி, ஷூ கீப்பர், முனியாண்டியின் முனிப்பாய்ச்சல், பாதகன், கோட்டை முனி, தொடு விரல், அடி ஆத்தி, உதிர், கில்லி மாப்பிள்ளை, ஸ்ரீ சபரி ஐயப்பன், சாஸ்தா, அதையும் தாண்டி புனிதமானது என பல படங்களில் நடித்து வருகிறேன்.

கவுண்டமணி அண்ணனோடு நடித்துவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனக்கு பெரும் பேரு வாங்கித் தரும்” என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment