‘கருவறை’க்கு தேசிய விருது: இயக்குனரைப் பாராட்டிய இசைஞானி!

இவி. கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா கருவறை குறும்பட இயக்குனர் இவி.கணேஷ் பாபுவை அழைத்து பாராட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

முக்கிய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீஸாகும் கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குநர் கணேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment