விஜய்யின் ‘குஷி’ படத்தைப் போல என் படத்தையும் ரசிப்பார்கள்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நம்பிக்கை

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் 1 ஆம் தேதியன்று வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார்.

தமிழில் சுபாஷ்கரனின் லைக்காவும், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர்.

படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய தயாரிப்பாளர் என். வி. பிரசாத், ”மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த அதிக திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன.

அந்த வரிசையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘குஷி’ திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும். இந்தப் படத்திற்கு தமிழிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, ” ஹீரோ விஜய் தேவரகொண்டா – ரியல் பான் இந்தியா ஸ்டார். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்து, அவர் எங்களுக்கும் குஷி தர வேண்டும்.

இந்த திரைப்படம் அனைத்து இடங்களிலும் பெரிய வெற்றியைப் பெற்று, அனைவருக்கும் குஷியை உண்டாக்கும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, ”தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் குஷியை உண்டாக்கும்.

உங்களை சிரிக்க வைக்கும். ‘பெள்ளி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.

இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Comments (0)
Add Comment