தமிழகத்தில் மழை நீரை சேமிக்கும் திட்டம் எதுவுமில்லை!

 – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி

விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.

அப்போது, “மழைக் காலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்தத் திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், “தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது” என்றும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

அதோடு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன்  இந்த மனுவையும் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Comments (0)
Add Comment