மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்:

ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள்.

ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு. உங்களுடைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் அறிந்து கொண்டு சட்டத்திற்கிணங்கிய காரியங்களிலே தலையிடுவோர்களை சிறிதேனும் தாட்சண்யமின்றி எவ்விதங்களாலும் அடக்கி விடுங்கள்.

மனத் துணிவுடையவர்களிடம் போலீஸாரின் குறும்பு செல்லமாட்டாது. மனத்துணிவுடையவர்களை பிசாசுகூட அணுகாது.

– 1907 மே மாதம் 4-ம் தேதியன்று பாரதியார் எழுதியது.

Comments (0)
Add Comment