மனிதம் வளர்க்கும் மரங்கள் வளர்ப்போம்!

உலகம் சுவாசிக்கும் நுரையீரல்கள்!
காடுகளை பிரசவிக்கும் கருவறைகள்!
காற்றை தூய்மை செய்யும் தொழிலாளிகள்!
மழையை பெய்யச் சொல்லும் முதலாளிகள்!
மண்ணரிப்பை தடுக்கும் நங்கூரங்கள்!
நிழல் விரிக்கும் பச்சைப் பாய்கள்!
நோய்கள் தீர்க்கும் மருத்துவர்கள்!

மனிதன் செய்த இயந்திரக் கைகளால்
உலகம் இன்று ஊனமானது!
இயற்கை தாயின் நெட்டை கைகள்
தளவாடங்களாய் தினம் உருவானது!
பச்சை வண்ணக் காடுகள் எல்லாம்
கட்டிடக் காடுகள் ஆனது!
மரங்கள் நின்ற திசைகள் எல்லாம்
சுவர்கள் மண்டி சுடுகாடானது.!
மனிதம் வளர்க்கும் மரங்கள் வளர்ப்போம்
உலகம் செழிக்க வளங்கள் பெறுவோம்!!!!

– நன்றி தினந்தந்தி

Comments (0)
Add Comment