கிங் ஆஃப் கொத்தா: ஓர் உற்சாகமான பயணம்!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் டிரெய்லரை இந்திய சினிமா ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்.

முன்னணி நட்சத்திர நாயகன் துல்கர் சல்மான் நடிப்பில் அதிகாரம், லட்சியம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய சாம்ராஜ்யaத்திற்கு கொண்டு செல்லும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஓணம் பண்டிகை கொண்டாட்டமாகப் ஆகஸ்ட் 24 அன்று பார்வையாளர்களை மகிழ்விக்கவருகிறது.

‘கிங் ஆஃப் கொத்தா’ உலகம் வித்தியாசமானது, விசுவாசம் ஒரு அபாயகரமான சூதாட்டமாகவும், அரியணைக்கான பந்தயம் இடைவிடாத முயற்சியாகவும் இருக்கும் இந்த உலகில் கோதாவிற்கு ராஜாவாகும் ஒரு கவர்ச்சியான கதையை இப்படம் சொல்கிறது.

ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஒரு வல்லமைமிக்க போட்டியாளராக துல்கர் சல்மான் முதன்மை வேடத்தில் பிரகாசிக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசியபோது, ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் ஒரு அசாதாரண பயணம்.

அழுத்தமான கதாபாத்திரங்கள், சிறப்பான கதை மற்றும் பிரமாண்டமான தயாரிப்பு என ஒவ்வொன்றிலும் இந்த படம் தனித்து நிற்கிறது.

முதலில் Zee Studios மற்றும் Wayfarer Films உடன் இணைந்து பணியாற்றியது உற்சாகமான அனுபவம். என் ரசிகர்களுக்கு இது சரியான ஓணம் விருந்தாகும் என்றார்.

Zee Studios South தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால், “படத்தின் அழுத்தமான கதை, அதற்கேற்ப மிகப்பெரிய பொருட்செலவோடு உருவாகியுள்ளதால், ஒரு தரமான படைப்பிற்கு உறுதியளிக்கிறது.

படத்தின் உருவாக்கம் பார்வையாளர்களை வசீகரிக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளதால் இது ஒரு மறக்கமுடியாத பயணமாக இருக்கும்” என்றார்.

Zee Studios மற்றும் Wayfarer Films கூட்டணியில் ‘கிங் ஆஃப் கொத்தா’ ஒரு தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ளது , இந்த படைப்பு அற்புதமான பெயர் பெற்ற இரண்டு நிறுவனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்.

அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் அசைக்க முடியாத அதிகாரத்திற்கான போரை, ஒரு மாறுபட்ட உலகத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது.

Comments (0)
Add Comment