மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

பல்சுவை முத்து:

நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது. நீங்களும் மாற வேண்டும்.

மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை; மாற்றங்களை எதிர்கொள்ள மனஉறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது எதுவும் உலகில் இல்லை.

நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு விநாடியும், நமது வாழ்வில் மீண்டும் பெறமுடியாத பெரும் செல்வமாகும்.

இந்த உலகில் மனித உழைப்பை நீக்கிவிட்டு பார்த்தால், வெறும் கல்லும் மண்ணும்தான் மிஞ்சும்…!

கற்றவர்களிடம் கற்பதைவிட கற்றுக் கொண்டிருப்பர்களிடம் கற்றுக் கொள்.

சமுதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம்தான்.

– கார்ல் மார்க்ஸ்

Comments (0)
Add Comment