காவல் நிலைய மரணங்களில் குஜராத் முதலிடம்!

காவல் நிலையங்களில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகமாக உள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார்.

அதில், “2018 ஏப்ரல் 1 முதல் 2023 மாா்ச் 31 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் 687 போ் உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 81, மகாராஷ்டிரத்தில் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 50, பிகாரில் 47, உத்தரப் பிரதேசத்தில் 41, தமிழ்நாட்டில் 36 பேரும் காவல் நிலையங்களில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2022-23-இல் 164 பேரும், 2021-22-இல் 175 பேரும், 2020-21-இல் 100 பேரும், 2019-20-இல் 112 பேரும், 2018-19-இல் 136 பேரும் போலீஸ் காவலில் உயிரிழந்தனா் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையப் புள்ளி விவரத்தில் இருந்து இத்தகவல் பெறப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment