வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 6.77 கோடி போ்!

நடப்பாண்டில் ஜூலை 31-ம் தேதி வரை 6.77 கோடி போ் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2023-2024 மதிப்பிட்டு ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான ஜூலை 31-ஆம் தேதி வரை, 6.77 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா் எனவும் இது முந்தைய ஆண்டை விட  16.1 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நாளான ஜூலை 31-ஆம் தேதியில் மட்டும் 64.33 லட்சம் பேருக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா் எனவும் 53.67 லட்சம் போ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா் எனவும் இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment