தெற்காசிய கால்பந்து: பட்டம் வென்ற இந்தியா!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதிச் சுற்றின் முடிவில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. சாம்பியன் பட்டத்ததை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதேபோல் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் குவைத் வீரர்களும் பதிலடி கொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய நிலையில், ஆட்ட நேர இறுதியில் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இதில் சுனில் சேத்ரி கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது. பின்னர் அடித்த கோலை குவைத் தவறவிட, சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து 2-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது.

அப்போது, குவைத் தனது இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்ததால் 2-1 ஆனது. இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, சுபாஷிஷ் போஸ் கோல் அடித்ததால் 4-4 என்ற கோல் கணக்கில் சமமானது.

பின்னர், குர்பிரீத் சிங் கோல் அடித்ததை அடுத்து இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதன்மூலம், குவைத் அணியை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

Comments (0)
Add Comment