மரகதச் சோலையாக மாறிய மயானம்!

கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன.

இந்த மரங்களை 70 வயதான அா்ச்சுனன் என்பவா், நட்டு பராமரிப்பதாக ஆட்சியா் சாா்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மயானத்தில் மரக் கன்றுகளை நட்டு, மரகதச் சோலையாக மாற்றிய அா்ச்சுனனை, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, நேரில் அழைத்து தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அா்ச்சுனனுக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டுத் தெரிவித்தாா்.

Comments (0)
Add Comment